|
|
பகிர்வு 6: மஹாகவி உருத்திரமூர்த்தியின் ஆறு காவியங்கள்
சமகால ஈழத்துக்கவிதையின் வளர்ச்சியை அடையாளங் காட்டும் முக்கியமான படைப்பாளிகளுள் அமரர் மஹாகவிக்கு முன்வரிசையில் இடமுண்டு. அவர் ஆற்றல்மிக்க கவிஞராக மட்டுமன்றி ஈழத்துத் தமிழ்க் கவிதைக்கான தனி அடையாளங் களை உருவாக்குவதற்குப் பங்காற்றிய ஒரு முன்னோடியுமாவார். எளிமையும் தெளிவும், சொற் சிக்கனமும் மிக்க அவரது கவிதை கள் மரபின்வழி அமைந்தாலும், புதிய செய்யுள் வடிவமொன்றை ஆக்கி அளித்த வகையிலும் அன்றாட உரைநடை மொழியின் நெகிழ்ச்சியைத் தன் கவிதையில் புகுத்திப் புதுமை செய்த வகையிலும் அவர் மரபின் வழிபாட்டாளர் அல்லர். மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு நினைவும் கவிப் பொருளாகக் கூடும் என்பதை அவரது கவிதைகள் நமக்கு உணர்த்தும்.
Date: 25/08/2019 (Sunday) Time: 2:00 PM to 4:00 PM
Venue: Senior Citizen Hall, 10 Watson St, Turner ACT 2612
Canberra, Australia.
|
|