மதுபாஷினி இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர். மூதூர் புனித
அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வி கற்றவர். மதுரை
மீனாட்சிகல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமாணியும், நியூ சவுத் வேல்ஸ்
பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுமாணிப்பட்டமும் , தகவல்
தொழினுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவும் பெற்றவர்
இவரது கவிதைத் தொகுப்புகள்: உரத்துப் பேச (2000), துவிதம் (2006), கருநாவு
(2013), பூவுலகை கற்றலும் கேட்டதும் (2017), நெடுமரங்களாய் வாழ்தல் (2021). இவரது படைப்புகள் பல்வேறு
இலக்கிய இதழ்களிலும், தொகுப்புகளிலும் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், மலையாளம், கன்னடம்,
சிங்களம் போன்ற மொழிகளில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக 1992-1997வரை
இருந்தவர். இவர் அவுஸ்திரேலிய அரச சேவையில் 1999 முதல் 2018 வரை மென்பொருள் வல்லுனராகவும்
, IT Commercial Contracts Administrator ஆகவும் பணிபுரிந்தவர்.